சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கட்டங்கள் நடந்து வரும் நிலையில், தற்போது திடீர் திருப்பமாக மற்றுமோர் விடயம் வெளியாகி இருக்கின்றது. இதனை தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ மூலமாகத் தெரிந்து கொள்வோம்.
அதில் சிவசங்கரி "நான் தான் சூர்யாவை விட்டு கயலின் நற்பெயரை கெடுப்பதற்காக திட்டங்களை தீட்டினேன், இந்த விஷயம் மட்டும் எழிலுக்கு தெரிந்தால்" என்று கூறிக் கொண்டிருக்கிறார். அதை மறைந்து நின்று கேட்ட கயல், நேராக வந்து சிவசங்கரியிடம் வந்து "நீ இதை செய்திருப்பாய் என்று நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை" என்று சொல்லி அவரின் கன்னத்தில் ஓங்கி அறைகிறார்.
தன்னை மன்னித்து விடுமாறு சிவசங்கரி கயலின் காலில் விழுந்து கதறுகிறார். இதனால் கயல் கோபத்துடன் அங்கிருந்து கிளம்பிச் செல்கிறார். இதனைத் தொடர்ந்து எழிலின் திருமணம் நடக்குமா..? இல்லையா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!