• Sep 20 2024

ஆனந்தியை வாயை மூடுமாறு சைகை காட்டிய கயல்... என்னைக் கொல்லாத ப்ளீஸ்-கயலிடம் கெஞ்சி அழும் எழில்... அடுத்து நடக்கப் போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஆனந்தியும் கயலும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆனந்தி "பிரபு விஷயத்தில் எனக்கு ரொம்ப பயமாய் இருக்கு அக்கா" எனக் கூறி அழுகின்றார். பதிலுக்கு கயல் வாயை மூடுமாறு கூறி சைகை காட்டுகின்றார்.


மறுபுறம் கயலுக்கு போன் பண்ணிய எழில் "நீ என்னைக் காதலிக்கிறாய் தானே, உன் மனசைத் திறந்து ஓப்பனாக சொல்லு, உன் மௌனம் என்னைக் கொல்லுது" எனக் கூறி கண் கலங்கி நிற்கின்றார். பதிலுக்கு கயல் எதுவுமே கூறாது மௌனமாக அழுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது.


Advertisement

Advertisement