சன் டிவியில் தற்போது நம்பர் 1 சீரியலாக இருந்து வருகிறது கயல். தற்போது எழில் திருமண காட்சிகள் தான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சன் டிவியின் நட்சத்திர கொண்டாட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றிருந்தது .இதில் கயல் குடும்பம் கலந்துகொண்டிருந்தது.இவர்களை காணவே திண்டுக்கல் மக்கள் திரண்டு சென்றனர்.அவர்களை கண்டதும் மக்கள் உற்சாகமடைந்து கரவோசம் செய்து வரவேற்றனர்.
இதனிடையே கயல் சீரியல் நடிகை சைத்திரா ரெட்டியை மேடையில் வைத்து ஆங்கர்ஸ் பல சுவாரஸ்ய கேள்விகளை கேட்டிருந்தனர்.
அந்தவகையில் கயல் மனதில் காதல் இருக்கு ஓடிய சீக்கிரம் மரமாக வளரும் என்று கூறிக்கொண்டே எழிலிடம் உங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயம் எது என்று கேட்கப்பட்டது..
அதற்கு எல்லா விஷயத்தையும் ஹாமா டீல் பண்ணுவான்.ரொம்ப வருசமா எனக்காக காத்துக்கொண்டிருக்கிறேன்.அவனை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என கயல் கூறியிருந்தார்.
மேலும் ''எழில் எதிரே நிக்கிறாங்க என இமாஜின் பண்ணி லைட்டா ப்ரொபோஸ் பண்ணுங்க என மேடையில் வைத்து ரசிகர்களின் ஆசையாக வேண்டுகோள் விடுக்கப்பட்டது.அதற்கு கயல் ''எனக்கு இந்த மாதிரியான பீல் வரும்ன்னு எதிர்பார்க்கல..உன்னையும்,ஆர்த்தியையும் பக்கத்தில வைச்சு பார்க்கும் போது கொஞ்சமா ஜெலிசியா பீல் ஆச்சு..நான் நினைக்கிறன் இதுக்கு பெயர் தான் காதலன்னு ...நான் உன்னை காதலிக்கிறேன் என கூறினார்.
இதனை கேட்டு மக்கள் உற்சாகமடைந்தனர்.இதனை சன் டிவி வீடியோவாக வெளியிட்டிருந்தது.
Listen News!