கன்னடத்தில் ஒளிபரப்பான அவுனு மாதே ஸ்ரவாணி எனும் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் சைத்ரா ரெட்டி. இவர் இதனைத் தொடர்ந்து தமிழில் ஷு தமிழில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி என்னும் சீரியல் மூலம் அறிமுகமாகினார். இது தவிர இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்தின் டீமில் இணைந்து நடித்திருந்தார்.
தற்பொழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார். 30 வயதாகும் சைத்ரா ரெட்டி தனது அக்கா குழந்தை லயா ராகாவை கொஞ்சும் வீடியோக்களையும் புகைப்படங்களையும் அடிக்கடி பகிர்ந்து வருகிறார்
இந்த நிலையில் சைத்ரா ரெட்டி தனது அக்கா மகளுக்கு தனது வாயால் நொறுக்குத்தீனி ஒன்றை வைத்துக் கொண்டு குழந்தையை வாயோடு வாய் வைத்து கவ்விக் கொள்வது போன்ற வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார்.
அதை பார்த்த சில நெட்டிசன்கள் குழந்தைக்கு இப்படி உணவு ஊட்டலாமா? இதெல்லாம் ரொம்ப தப்பு என சைத்ரா ரெட்டியை திட்டித் தீர்த்து வருகின்றனர். சமீபத்தில் குழந்தைகளுக்கு உதட்டில் முத்தம் கொடுப்பதை சில நடிகைகள் பழக்கமாக கொண்டுள்ள நிலையில், பாலிவுட்டிலேயே அந்த நடிகைகள் செய்வது தவறு என நெட்டிசன்கள் கண்டித்து வருகின்றனர். இந்நிலையில், சின்னத்திரை நடிகை சைத்ரா ரெட்டியின் இந்த செயலுக்கும் கண்டனங்கள் குவிந்துள்ளன.
Listen News!