சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் கயலுக்கும் எழிலுக்கும் திருமணம் நடைபெறுமா.? என்ற எதிர்பார்ப்பையும் மீறி, கயல் உயிர் பிழைப்பாரா..? என்ற எதிர்பார்ப்புத்தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் நிலவி இருக்கின்றது.
தற்போது சிவசங்கரியின் சூழ்ச்சிக்கு ஏற்ப கயலைக் கடத்திய கௌதம் அவரைத் கயிறு கட்டித் தொங்கப் போட்டிருக்கின்றார். எழில் கயலைக் காணாது தேடி அலைகின்றார்.
இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வீடியோவில் கயல் கடத்தப்பட்டிருக்கின்றார் என்ற விஷயம் யாருக்கும் தெரியக்கூடாது என்று கூறி உண்மையை மறைக்க சொல்கின்றார். பின்னர் கயலை தேடி காரை எடுத்துக் கொண்டு கிளம்புகின்றார் எழில்.
இறுதியில் எழில் கௌதமிடமிருந்து காப்பாற்றப்படுவாரா..? இல்லையா..? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!