சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று கயல். இந்த சீரியலானது தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாக கொண்டு அமைந்துள்ளது, அதாவது கடின உழைப்பாளியான கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் எவ்வாறு சிக்கலில் இருந்து காப்பாற்றி வருகிறார்.
இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கயல் எழிலிடம் உன் மடியில் கொஞ்ச நேரம் தலை வைத்து தூங்கவா..? எனக்கு அப்பா ஞாபகம் வருது எனக் கூறுகின்றார்.
அதற்கு எழிலும் சம்மதிக்கின்றார். இதனையடுத்து கயலும் எழிலின் மடியில் படுத்துக் கொள்கின்றார். அப்போது கயலை தன் கைகளால் தொடவா வேணாமா என எழில் சற்றுத் தயங்கி யோசிக்கின்றார்.
அந்த சமயத்தில் கயலிற்கு வீட்டில் இருந்து போன் வருகின்றது. ஆனந்தி விஷயமாக கொஞ்சம் பேசணும் என்று உடனடியாக வீட்டிற்கு வருமாறு கூறுகின்றனர். அதனைக் கேட்டதும் கயல் பதற்றமடைகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
Listen News!