தென்னிந்திய சினிமாவிலேயே முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.கேரளாவை சேர்ந்த இவர் சிவகார்த்திகேயனின் ரஜினி முருகன், ரெமோ உள்ளிட்ட படங்களில் செம ஹோம்லியாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.நடிகையர் திலகம் படத்தில் அப்படியே சேலை அணிந்து சாவித்ரியை போலவே திரையில் தோன்றி பலரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
கடந்த ஆண்டு சாணிக் காயிதம் படத்தில் தன்னால் இப்படியும் நடிக்க முடியும் என மிரட்டி இருந்தார் கீர்த்தி சுரேஷ்.
இவ்வாறுஇருக்கையில் வாஷி மற்றும் சர்காரு வாரி பாட்டா ஆகிய படங்களுக்குப் பிறகு, இயக்குநர் கே.சந்துரு இயக்கும் ‘ரிவால்வர்’ ரீட்டா’ என்ற சுவாரஸ்யமான பெண்கள் சார்ந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் தமிழர்கள் அனைவரும் பொங்கல் கொண்டாடிய நிலையில் கீர்த்தி சுரேஷ் தான் எப்படி பொங்கல் கொண்டாடியுள்ளார் என இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.சேலையில் அழகு தேவதை போல் மின்னும் கீர்த்திக்கு பலரும் லைக்ஸ்களை இட்டு வருகின்றனர்.
Listen News!