• Sep 20 2024

தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் கன்னத்தில் அறைந்த கீர்த்தி சுரேஷ்- அதிர்ச்சியில் உறைந்த படக்குழு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமானவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் தமிழில் சாணிக்காயிதம் என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இயக்குநர் செல்வராகவனும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து உள்ளார்.

இது தவிர தெலுங்கில் மகேஷ்பாபுவுடன் இணைந்து சர்க்காரு வாரி பாட்டா என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் நேற்று வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பின் போது, தவறுதலாக மகேஷ் பாபுவின் முகத்தில் கீர்த்தி சுரேஷ் அடித்து விட்டாராம். இந்த சம்பவத்தை காட்சி ஒன்றில் நடித்துக்கொண்டிருக்கும் போது, எனக்கே தெரியாமல் தீடீரென அப்படி நடந்து விட்டது என்று பேட்டியில் கீர்த்தி கூறியுள்ளார்.

அதன்பின் மகேஷ் பாபுவிடம் கீர்த்தி மன்னிப்பு கேட்டாராம். அதற்கு மகேஷ் பாபு, ’அதனால் ஒன்றும் இல்லை, தெரியாமல் நடந்த விஷயம் தானே' என்று பெருந்தன்மையாக கூறினாராம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement