• Sep 20 2024

மாடர்ன் லுக்கில் போட்டோ சூட் நடத்திய கீர்த்தி பாண்டியன்! வைரலாகும் புகைப்படங்கள்

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனை அசோக் செல்வன் அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணத்துக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்திருந்தனர்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் தான் அசோக் செல்வன். இவரது நடிப்பில் வெளியான போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அண்மையில் சபாநாயகன் திரைப்படமும் வெளியானது.


அதேபோல், கீர்த்தி பாண்டின் நடிப்பில் கண்ணகி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. 

இவ்வாறு, திருமணத்திற்குப் பின்னரும் அசோக் செல்வன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி பாண்டினும் தமது கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது கீர்த்தி பாண்டின் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.










Advertisement

Advertisement