தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளிவந்த 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் ‘நடிகையர் திலகம்’ திரைப்படம் தான் இவருக்கு சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இப்படத்திற்காக தேசிய விருதினையும் பெற்றிருந்தார்.
கடைசியாக மரக்காயர், அண்ணாத்த,சர்காரு வாரி பட்டா, சாணிகாயிதம், வாஷி படங்களில் நடித்து இருந்தார்.சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வளர்ப்பு நாய் Nyke-ன் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். 'இந்த நாள் இனிய நாள்' என தலைப்பிட்டு நாயை கொஞ்சும் புகைப்படங்களை அப்லோடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது..
Listen News!