நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்து வருகின்றார்.கீர்த்தி சுரேஷின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றால், அது பிரபல நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மகாநடிகை திரைப்படம் தான்.
இப்படம் நல்ல வரவேற்பையும், வசூலையும் குவித்தது... மட்டுமன்றி, கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்று தந்தது.இப்படத்திற்கு பின்னர், தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அந்த வகையில், தற்போது இவர் கதையின் நாயகியாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும், கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியான தசரா திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது.
மேலும் ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா, மாமன்னன், போன்ற பல படங்கள் இவரின் கைவசம் உள்ளன முன்னணி நடிகையாக பல படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வபோது, கீர்த்தியின் திருமண பேச்சு குறித்து சமூக வலைதளத்தில் பேச்சு அடிபட்டு வரும் நிலையில், இது நேரடியாகவே ஒரு ரசிகர் instagram பக்கத்தில் கீர்த்தி சுரேஷிடம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு கீர்த்தி சுரேஷ், வடிவேலு தன்னுடைய இரண்டு பாக்கெட்டிலும் கையை விட்டு ஒண்ணுமே இல்லை என்று காட்டுவது போல் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு, தற்போதைக்கு திருமண பேச்சுக்கு இடமில்லை என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம், சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
Listen News!