• Sep 20 2024

பந்தூரி மாம்பழத்தை ஒரு பிடி பிடித்து ரசித்து சாப்பிட்ட கீர்த்தி சுரேஷ்- அடடே என்ன ஒரு சுவை

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ். தேசிய விருதை வென்ற பின்னர், மிகவும் பரபரப்பாக தன்னுடைய அடுத்தடுத்த படங்களில் கீர்த்தி சுரேஷ் கவனம் செலுத்தி வந்தாலும், இவரை சுற்றி எப்போதும் ஏதாவது வதந்திகளும் வலம் வந்து கொண்டு தான் இருக்கிறது.

அதிலும் கீர்த்தி சுரேஷ், அனிரூத், கீர்த்தியின் கல்லூரி நண்பர், தொழிலதிபர், என ஒரு சிலரோடு காதல் சர்ச்சையில் இணைத்து பேசப்பட்ட நிலையில், சமீபத்தில் இவர் துபாயை சேர்ந்த தொழிலதிபர் பர்ஹான் என்பவருடன், இணைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்து கூறி இருந்தார். இதனால் பர்ஹானைத் தான் கீர்த்தி சுரேஷ் விரும்புகின்றார் என்றும் வதந்தி வந்தது.


இதையெல்லாம் பொருட்படுத்தாமல் கீர்த்தி சுரேஷ் தனது நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றார். அதன்படி தற்பொழுது தமிழில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள மாமன்னத் திரைப்படத்தில நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் ஷுட்டிங் முடிவடைந்து அண்மையில் மிகவும் பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இதில் கீர்த்தி சுரேஷ் கறுப்பு நிற சேலையில் கலந்து கொண்டு ரசிகர்களைக் கவர்ந்திருந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் கீர்த்தி தன்னுடைய புகைப்படங்களையும் பதிவிட்டு வருவார். அந்த வகையில் தற்பொழுது மாம்பழம் சாப்பிடும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். 



Advertisement

Advertisement