• Sep 20 2024

கண் மருத்துவமனைக்காக நிதி உதவி செய்த கே.ஜி. எப் திரைப்பட இயக்குநர்- குவிந்து வரும் பாராட்டுக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


கன்னட சினிமாவில்  முக்கிய இயக்குநராக வலம் வருபவர் தான் பிரசாந்த் நீல். இவர் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கன்னடத்தில் மட்டுமல்லாது பான் இந்திய அளவில் தவிர்க்க முடியாத இயக்குநராக வலம் வருகின்றார்.

அதிலும் இவர் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வேற லெவல் வெற்றி பெற்றதோடு வசூலிலும் அள்ளிக் குவித்தது. இதனை அடுத்து தெலுங்கு நடிகர் பிரபாஸை வைத்து சலார் என்னும் படத்தை இயக்கி வருகின்றார்.


இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் தேர்வாகியுள்ளார். கே.ஜி.எப் திரைப்படத்தைப் போல இப்படமும் பிரமாண்டமாக இருக்கும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் அவர் சொந்த ஊரான ஆந்திர மாநிலம் நீலகண்டபுரத்தில் கட்டப்படும் எல் வி பிரசாத் கண் மருத்துவமனைக்காக 75 லட்ச ரூபாய் நன்கொடையாக அளித்துள்ளார்.இதை அவரின் பெரிய தந்தையும் முன்னாள் அமைச்சருமான ரகுவீர ரெட்டி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement