• Sep 20 2024

விருது கிடைக்காத நடிகையை பாராட்டிய குஷ்பூ…வைரலாகும் ட்விட்டர் பதிவு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

"முந்தானை முடிச்சு" என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல மொழிகளிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவரே நடிகை ஊர்வசி. இவரின் குறு குறு பார்வைக்கும் புன்னகை கலந்த சிரிப்பிற்கும், திறமையான நடிப்பிற்கும் என்றே அந்தக்காலம் தொடக்கம் இன்றுவரை ஏராளமான ரசிகர் கூட்டம் இவருக்கு உண்டு.

கதாநாயகியாக பல படங்களில் நடித்து வந்த இவர் காலம் கடந்ததும் நடிப்பிற்கு முழுக்குப் போடாமல் தொடர்ந்தும் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார். இந்தநிலையில் சமீபத்தில் வெளியாகிய 'வீட்ல விசேஷம்' படத்தினைத் தொடர்ந்து 'சூரரைப்போற்று' என்ற படத்திலும் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது தேசிய விருது வழங்கும் விழா இடம்பெற்றுள்ளது. இதில் தமிழிலும் பல படங்களும் தேசிய விருதினை வென்றிருக்கின்றன. அவற்றுள் குறிப்பாக சுதா கொங்காரா இயக்கத்தில், சூர்யா மற்றும் அபர்ணா பாலமுரளி இணைந்து நடித்திருந்த 'சூரரைப் போற்று' என்ற திரைப்படம் ஆனது சிறந்த நடிகர் (சூர்யா), சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த பின்னணி இசை (ஜி.வி.பிரகாஷ் குமார்) உட்பட 5 தேசிய விருதுகளை வென்று பலரதும் வாழ்த்துக்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்ததிருந்தவரே நடிகை ஊர்வசி. இப்படத்தில் விருதுகளை வென்ற அனைவருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்ற நிலையில் நடிகை குஷ்பூவும் தமது ட்விட்டர் பக்கத்தில் தேசிய விருது பெற்ற ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மேலும் ஒரு பதிவில் நடிகை குஷ்பூ இது தொடர்பாக குறிப்பிடுகையில் "ஊர்வசி விருது வென்றிருக்க வேண்டும் என நினைக்கிறேன். அவர் (நடிப்பு) outstanding-ஆக இருந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவிக்கும் அதேவேளை விருது பெறாத ஒருவரையும் குஷ்பூ பாராட்டி பேசியிருப்பது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இவரது இந்தப் பதிவினை பார்த்த பலரும் இதனைப் பகிர்ந்து வழிமொழிந்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement