பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவராகவும் கவர்ச்சி நாயகியாகவும் வலம் வருபவர் கியாரா அத்வானி.இவர் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் பிஸியாக நடித்து வருகின்றார்.
இவர் எம்எஸ் தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்க பட்ட படத்தில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை உருவாக்கினார்.
கியாரா அத்வானி தற்போது இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் RC -15 என்ற படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த் மல்ஹோத்ராவை கியாரா அத்வானி காதலிக்கிறார் என்று சினிமா வட்டாரங்களில் செய்திகள் பரவி வந்த நிலையில், இவர்களின் திருமணம் வருகின்ற பிப்ரவரி 6 -ம் தேதி ஜெய்சல்மர் நட்சத்திர ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அத்தோடு இந்த வருடம் பாலிவுட்டில் ரன்பீர் கபூர் - ஆலியா பட், கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷல் போன்ற பிரபலங்கள் திருமணம் செய்தது குறிப்பிடத்தக்கது. அந்த லிஸ்ட்டில் விரைவில் கியாரா அத்வானி பெயரும் வர இருக்கிறது.
Listen News!