பாலிவுட்டில் இந்த ஆண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஒரு ஜோடியாக கியாரா அத்வானி - சித்தார்த் மல்ஹோத்ரா ஜோடி விளங்கி வருகின்றது. அதற்கு முக்கிய காரணமே தங்கள் காதல் பற்றி மீடியாக்களிடமும் சரி, நண்பர்களிடமும் சரி எங்கேயும் மூச்சு விட்டு உறுதி செய்யாமல், எந்தவொரு கிசு கிசுவிலும் சிக்காமல் தற்போது வெற்றிகரமாக தங்களுடைய திருமணத்தை நிறைவு செய்திருக்கின்றனர்.
அந்தவகையில் இவர்களது கனவுத் திருமணம் ராஜஸ்தான், ஜெய்சால்மரில் பிரமாண்டமாகவும், கோலாகலமாகவும் நடைபெற்று முடிந்த நிலையில், அன்று இரவே புகைப்படங்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் மனம் கவர்ந்த ஜோடியாக மாறினர்.
மேலும் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே சூழ இத்திருமணம் நடைபெற்ற நிலையில், ஒட்டுமொத்த பாலிவுட் திரையுலகமும் இந்தத் தம்பதிக்கு சமூக வலைத்தளங்களின் வாயிலாக தங்களது வாழ்த்து மழையை இன்றுவரை பொழிந்து வருகின்றனர்.
மேலும் நடந்து முடிந்த இந்தத் திருமணத்தில் ஒரு சிலருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. திருமணம் முடிந்த கையோடு தன் மனைவியை டெல்லியில் இருக்கும் தன் உடைய பெற்றோர் வீட்டிற்கு அழைத்துச் சென்றார் சித்தார்த் மல்ஹோத்ரா.
இந்நிலையில் கியாரா அத்வானி கர்ப்பமானதால் தான் இவ்வாறு அவசர, அவசரமாக திருமணம் நடந்திருக்கிறது என பேச்சு ஒன்று புயல் போல் கிளம்பியது. இதை பார்த்த கியாராவின் ரசிகர்கள் கோபம் அடைந்து தாறுமாறாக விளாசி வருகின்றார்கள்.
இதனைத் தொடர்ந்து பாலிவுட்டின் நம்பர் ஒன் விமர்சகர் நான் தான் என சொல்லி வரும் கமால் ஆர். கான் எனப்படும் கே.ஆர்.கே. தற்போது கியாரா அத்வானி பற்றிய இந்த சர்ச்சையை ஊதிப் பெரிதாக்கி வருகின்றார். அதாவது கியாரா அத்வானியின் பெயரை குறிப்பிடாமல் ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது "முதலில் கர்ப்பமாகிவிட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொள்வது தான் பாலிவுட்டின் புது டிரெண்ட் ஆகும். பாலிவுட்டில் அண்மையில் நடந்த திருமணமும் கூட இதே ஃபார்முலாவை தான் பின்பற்றியிருக்கிறார்களாம். நல்லது" என சூசகமாக கியாரா அத்வானியை தெரிவித்துள்ளார்.
கியாரா அத்வானி பற்றிய இந்தத் தகவலானது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இவ்வாறான கருத்துக்களை கண்டித்தும் வருகின்றனர்.
Listen News!