பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பலர் விரும்பினாலும், சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியா வேண்டாம்டா சாமி என்கின்றனர்.பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் மக்கள் மத்தியிலும் பேசுபொருளாக இருக்கும்.
இந்நிலையில் கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி பிக்பாஸ்சீசன் 6 ஆரம்பமாகி விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது.இதில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகி தற்போது ஜி.பி.முத்து, சாந்தி, அசல் கோலார் ஆகிய போட்டியாளர்கள் வெளியேறி உள்ளனர்.
இதில் ரச்சிதா மற்றும் ராபர்ட் மாஸ்டர் இருவருக்குள்ளும் காதல் இருப்பது போல பலரும் பேசிக்கொள்கிறார்.அதே போல் ராபர்ட் மாஸ்டரும் நடந்து கொள்கிறார்.இன்று இவர்கள் இருவரும் சாப்பாடு சாப்பிடும் போது சின்ன சண்டை ஏற்பட்டது.பின்னர் எல்லோருமாக சேரந்து சமாதானப்படுத்தினார்கள்.ஆனால் இருவரும் செல்ல சண்டையே போட்டார்கள்.
இவ்வாறுஇருக்கையில் ஷிவின் மற்றும் ரச்சிதா சாப்பிட்டுக்கொண்டு இருக்கும் போது ராபர்ட் மாஸ்டர் ஷிவினுக்கு முத்தம் கொடுத்துவிட்டு என் சார்பாக ரச்சிதாவிற்கு கொடுங்க என சொல்கிறார்.அதே போல் ஷிவினும் கொடுக்கிறார்.இப்படி ரச்சிதாவை சமாதானப்படுத்த ராபர்ட் கடும் எவக்ற் போட்டு வருகிறார்.
Listen News!