கடந்த 2007ம் ஆண்டு ஜுவா நடிப்பில் வெளியான கற்றது தமிழ் என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் தான் நடிகை அஞ்சலி. இதனைத் தொடர்ந்து அங்காடித்தெரு என்னும் காதல் படத்தில் நடித்ததன் மூலமே பிரபல்யமானார்.
இதனை அடுத்து பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தமிழைத் தவிர தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள ஃபால் (Fall) எனும் வெப் தொடர்வருகிற டிசம்பர் 9-ந் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
எனவேஇப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் அஞ்சலி தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார். அந்த வகையில் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த விடயம் தற்பொழுது வைரலாகி வருகின்றது.அதில் பேசும் போது தனது சினிமா வாழ்க்கையில் சந்தித்த பல சவால்கள் குறித்து பேசினார்.
மேலும் காதல் என்றாலும் சரி கல்யாணம் என்றாலும் சரி முதலில் மரியாதையாக நடத்தணும். மரியாதை இல்லாமல் காதல் இருப்பது என்று சொல்வதெல்லாம் நல்லா இருக்கா எனக்கு முதலில் என்னை மரியாதையா நடத்தனும் அப்ப தான் உறவு பலமாக இருக்கும் என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் முத்தக் காட்சியில் நடிப்பதை விட அந்தரங்கக் காட்சியில் நடிப்பது தான் கஷ்டம். நாம இவ்வளவு தான் இருக்கும் ஈசியா பண்ணிட்டு போய்டலாம் என்று நினைப்போம்.ஆனால் அதில நடிக்கும் போது தான் தெரியும் அது அவ்வளவு கஷ்டமாக இருக்கும் என்று. ஒரு கமெராவில் எடுத்தால் கூட அந்த சீன் எடுக்கும் போது 15 பேராவது நிற்பாங்க ஹுரோ புது முகமாக இருக்கும் தெரியாத ஒருத்தரோட அப்படி ஒரு சீன்ல நடிக்கிறது என்பது கஷ்டம் .ஆனால் எல்லாத்திற்கும் ஒரு லிமிட் இருக்கு தானே. இதெல்லாம் தாண்டி தற்பொழுது 15 வருடங்களை சினிமாவில் நிறைவு செய்திருக்கின்றேன் என் நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்றும் தான் நடித்து வரும் வெப் தொடரில் நடிப்பது குறித்தும் பேசியிருந்ததைக் காணலாம்.
Listen News!