விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் எதிர்பாராத விதமாக பல அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது கோபி பாக்கியாவை பிரிந்து சென்று பாக்யாவுக்கு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை கொடுத்து வர அதை எல்லாம் ஏற்று தனி ஆளாக போராடி வருகிறார் பாக்கியா.
இது ஒரு புறம் இருக்க இனியாவும் இப்போது பாக்கியா வீட்டிற்குச் சென்று விட்டார். கோபி ஒரு புறம் குடித்து விட்டு ரோட்டில் கிடந்ததோடு பாக்கியாவே அவரைக் கொண்டு வந்து வீட்டில் சேர்த்தால் ராதிகா தற்பொழுது கடுப்பாகி வீட்டை விட்டு செல்லும் அளவுக்கு வந்து விட்டார்.
கோபியும் ராதிகாவை எவ்வளவு சமாதானப்படுத்த முயற்சி செய்தாலும் ராதிகா அதனைக் கேட்பதாகவே இல்லை. இதனால் சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போவது என்பதை அறிய ரசிகர்கள் மிகவும் ஆவலாகவும் இருக்கின்றனர்.
இப்படியான நிலையில் இந்த சீரியலில் ராதிகாவின் அம்மா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளதாகவும் அவர் சீரியலில் ஷுட்டிங்கின் போது எடுத்த புகைப்படமும் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!