கடந்த 2018ம் ஆண்டில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியானது கோலமாவு கோகிலா படம். படத்தில் யோகிபாபு, நயன்தாரா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் முதல் படமாக வெளியான கோலமாவு கோகிலா படம் மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது.
நகைச்சுவையாக எடுக்கப்பட்ட கோலமாவு கோகிலா படத்தை தொடர்ந்தே சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தையும் இயக்கி வெற்றிப்படமாக்கினார் நெல்சன்.நயன்தாராவை காதலிக்கும் கேரக்டரில் யோகிபாபு சிறப்பாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்தே சிவகார்த்திகேயனின் டாக்டர், விஜய்யின் பீஸ்ட் படங்களை இயக்கும் வாய்ப்பு நெல்சன் திலீப்குமாருக்கு அமைந்தது. தொடர்ந்து தற்போது ஜெயிலர் படத்தையும் இயக்கி முடித்துள்ளார்.
கதாநாயகியை மையமாக வைத்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கியிருந்தார் நெல்சன் திலீப்குமார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதை கதைக்களமாக படத்தில் கொண்டிருந்தார் நெல்சன்.
இந்தப் படத்தில் யோகிபாபுவின் நடிப்பும் மிகச்சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் கோலமாவு கோகிலா 2 படம் விரைவில் உருவாகவுள்ளதாக நடிகர் யோகிபாபு தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற அவர், இந்தத் தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்
தற்போது ஜெயிலர் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள நிலையில், அடுத்த முயற்சியாக நெல்சன் கோலமாவு கோகிலா படத்தை கையில் எடுப்பாரா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Listen News!