• Sep 21 2024

KPY பாலா மற்றும் வினோத் யாழ்ப்பாணத்திற்கு திடீர் விசிட்... செல்பி எடுப்பதற்காக படையெடுக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியில் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை வென்ற பாலா மற்றும் வினோத் ஆகியோர் தற்போது இலங்கைக்கு திடீர் விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். 


அதாவது 'புங்குடுதீவின் மலரும் நினைவுகள் Dinner night  2023' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். மேலும் அவர்கள் இருவரும் யாழ்ப்பாணத்திற்கு வருகின்றமை இதுவே முதல்தடவை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.


அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள செல்லா பலஸ் மண்டபத்தில் இன்று மாலை 6 மணிக்கு கலகலப்பான நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன் இருவரும் அதில் பங்கேற்கவுள்ளனர். இதில் குறிப்பாக புங்குடுதீவு மக்களை ஒன்றிணைத்து அவர்களின் பழைய மலரும் நினைவுகளை மீட்டு சந்தேசத்தை கூட்டுகின்ற ஒரு நிகழ்வாகவே இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலக்கப்போவது யாரு பிரபலங்களான பாலா மற்றும் வினோத் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றமையால் ரசிகர்கள் பலரும் அவரை காண்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு படையெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement