சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இதில் கார்த்திக் சுந்தரியின் அம்மாவிடம் சுந்தரிக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை சொன்னதால் அவர் அதிர்ச்சியடைந்து மயங்கி விழுந்ததோடு ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டார்.
அத்தோடு சுந்தரியின் அம்மாவுக்கு பேச்சு வராமல் போய் விட்டது. இருப்பினும் சுந்தரிக்கு தன்னுடைய அம்மாவுக்கு இப்படியானதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஹாஸ்பிட்டலுக்கு வந்தும் கார்த்திக் சுந்தரியின் அம்மாவைக் போய் பார்க்காதது சுந்தரிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது.
மேலும் கிருஷ்ணா தனது மனைவியிடம் சென்று சுந்தரியின் அம்மாவுக்கு இப்படியானதற்கு காரணம் கார்த்திக் தான் என்று கூற இதனை கேட்டுக் கொண்டிருந்த சுந்தரி அதிர்ச்சியடைகின்றார்.இதன் பின்னர் கிருஷ்ணாவையும் மாலினியையும் அழைத்து உண்மையைக் கேட்கின்றார்.
இது மட்டுமல்லாமல் தன்னுடைய அம்மாவிடம் சென்று உன்னுடைய மனசில் என்ன நினைக்கிறீங்க என்ற விடயத்தையும் சொல்லி விடுகின்றார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த கார்த்திக் சுந்தரிக்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என அதிர்ச்சியடைகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.
Listen News!