• Sep 20 2024

"சினிமாவை விட்டு ஓடிடு"... லாஸ்லியாவை மிரட்டிய கே.எஸ்.ரவிக்குமார்... கோபத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இலங்கையிலிருந்து ஒரு செய்தி வாசிப்பாளராக வந்து, அதன் பின்னர் பிக்பாஸ் சீசன் 3இல் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் லாஸ்லியா. 


இந்நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்தவகையில் தனது அறிமுகத் திரைப்படமான பிரண்ட்ஷிப் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தை தொடர்ந்து கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

இந்தத் திரைப்படமானது எதிர்பார்த்தளவிற்கு பெரியளவு வரவேற்பு பெறவில்லை என்றாலும் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது எனக் கூறலாம். இத்திரைப்படத்தில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 


இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ரவிக்குமார் லாஸ்லியாவை பங்கமாக கலாய்த்துள்ளார். அந்த விஷயமானது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக எழுந்துள்ளது.

அந்த வகையில் கே.எஸ் ரவிக்குமார் "நீ கொஞ்சம் குண்டாகி விடு. அப்பொழுது தான் தமிழ் சினிமாவில் உனக்கு நிரந்தர இடம் கிடைக்கும். இல்லை என்றால் நீ இப்படி ஒல்லியாகவே இருந்தால் ஹிந்தி சினிமா பார்க்கும் ஓடிவிடு" என்று லாஸ்லியாவை வம்பு இழுக்கும் வகையில் பேசியுள்ளார்.


எது எவ்வாறாயினும் பொது இடத்தில் வைத்து லாஸ்லியாவை சினிமாவை விட்டு ஓடி விடு என ரவிக்குமார் கூறிய விடயமானது லாஸ்லியா ரசிகர்களுக்கு சற்று கோபத்தைக் கொடுத்துள்ளது.

Advertisement

Advertisement