விஜய் தொலைக்காட்சியில் மாபெரும் வெற்றி நடைபோடும் நிகழ்ச்சி என்றால் முதலில் நம் நினைவுக்கு வருவது 'குக் வித் கோமாளி" தான். உலகளவில் பார்வையாளர்களை கொண்டுள்ள 'குக் வித் கோமாளி', முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் சமையல் நிகழ்ச்சியை நடத்துவதே இதன் தனி சிறப்பு என்று கூறலாம்.
குக்குடன் கோமாளி சேர்ந்து நகைச்சுவையுடன் சமைக்கும் இந்த நிகழ்ச்சி 3 சீசன்களை கடந்து, வெற்றிகரமான 4 வது சீசனை நடத்தி கொண்டிருக்கிறது. இந்த சீசன் தற்போது தனது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற வைல் கார்டு எண்ட்ரியில் ஆண்ட்ரியன் வெற்றிபெற்றார்.
இந்த நிலையில் அண்மையில் இந்த நிகழ்ச்சிக்கான ஃபைனல்ஸ் நிகழ்ச்சி ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது.,தில் மைன் கோபி வின்னராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.
இப்படியான நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஃபைனல் எப்பிஷோட் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு 5 மணிநேரத் தொடராக ஒளிபரப்பப்படவுள்ளது. அந்த வகையில் தற்பொழுது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் அனைத்து போட்டியாளர்களும் இந்த நிகழ்ச்சியால் தமது வாழ்க்கையில் நடந்த மாற்றங்களைச் சொல்லி அழுகின்றனர்.
அத்தோடு ப்ரியங்கா,மாகாபா ஆனந்த், இயக்குநர் மாரி செல்வராஜ், நடிகர் பரத், வாணி போஜன் ஆகியோரும் ஸ்பெஷல் கெஸ்டாக கலந்து கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!