• Sep 20 2024

இன்னும் ஐந்து நாட்களில் ‘குற்றம் புரிந்தால்’ திரைப்படம் ரிலீஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

அமராவதி பிலிம் ஸ்டுடியோஸ் சார்பில், தயாரிப்பாளர் ஆத்தூர் ஆறுமுகம் தயாரித்துள்ள திரைப்படம் தான் ‘குற்றம் புரிந்தால்.’ ‘நான் சிவனாகிறேன்’, ‘இரும்பு மனிதன்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் டிஸ்னி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.

இப்படத்தில் ஆதிக் பாபு கதாநாயகனாக நடித்திருக்கிறார். பெங்களூருவைச் சேர்ந்த அர்ச்சனா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர், அபிநயா, அருள் டி.ஷங்கர், ராம், ரேணிகுண்டா நிசாந்த் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு – கே.கோகுல், இசை – கே.எஸ்.மனோஜ். கபிலன் மற்றும் கார்த்திக் நேதா இருவரும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். 

‘குற்றம் புரிந்தால்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 24-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாக இன்னும் 5 நாட்கள் இருப்பதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.



Advertisement

Advertisement