தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி சேனல்களில் மிகவும் பிரபலமானது விஜய் டீவி. இது காலத்துக்கு காலம் பல பிரபலங்களை உருவாக்கி வருகின்றது. இவ்வாறான விஜய் டீவி நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவரே நடிகை ஜாக்குலின். திறமை இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும், எந்த வழியிலேனும் மக்கள் மனதை கவர்ந்து இழுக்க முடியும் என்ற வரிசையில் இடம்பெற்ற ஒருவரே இவர்.
அந்த வகையில் ஜாக்குலின் விஜய் டீவி தொலைக்காட்சியில் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியின் மூலமே அறிமுகமானவர் எனப் பலரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் உண்மையில் தொகுப்பாளராக வதற்கு முன்பாகவே விஜய் டீவியில் 'கனாக்காணும் காலங்கள்', 'ஆண்டாள் அழகர்' போன்ற சீரியல்களில் நடித்திருந்தார். அதன்பின்தான் தான் இவர் 'கலக்கப்போவது யாரு' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி பல ரசிகர்கள் மனங்களை வென்று மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.
இறுதியாகக் கூட ' தேன்மொழி பிஏ' என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஓய்வில்லாமல் பிஸியாக ஓடிக்கொண்டிருந்த ஜாக்லின் துல்கர் சல்மான், ரக்சன் ஆகியோர் நடிப்பில் வெளி வந்த 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' என்ற திரைப்படத்திலும் ஒரு சில காட்சிகளில் வந்து போகின்றார். அது மட்டுமல்லாது நயன்தாரா நடிப்பில் வெளியான 'கோலமாவு கோகிலா' என்ற திரைப்படத்திலும் சிறப்பாக நடித்து அசத்தியிருப்பார்.
இவ்வாறாக கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் திறமையாக நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார். அத்தோடு சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் சிறப்பாக பயணித்து லட்சக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்திருக்கின்றார். தற்போது ஜாக்குலின் தொகுப்பாளினியாகவும் இல்லை, நாயகியாகவும் எதிலும் நடிக்கவில்லை. தற்போது அவர் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றார்.
இந்த நிலையில் இவர் தனது இன்ஸடா பதிவு ஒன்றின் மூலமாக தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறியிருக்கின்றார். அதாவது வாந்தி, மயக்கம் வந்தாலும் தன்னை உடற்பயிற்சி செய்யச் சொல்லி கொடுமைப்படுத்துவதாக அவரே ஜாலியாக ஒரு வீடியோ ஒன்றினை வெளியிட்டு கூறியிருக்கின்றார். அந்த வீடியோவை தற்போது இவரின் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Listen News!