தமிழில் வெளியாகும் சிறந்த படங்கள், சிறந்த சின்னத்திரை சீரியல்கள், சிறந்த நடிகர், நடிகை, அதில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு ஆண்டுதோறும் விருது வழங்கி வந்தது.
இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வெளியான படங்களுக்கு மொத்தமாக விருதை தமிழக அரசு அறிவித்தது.
தமிழக அரசின் விருது வழங்கும் விழா, இந்த விழா சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இதில் உச்சி முகர்ந்தனை படத்தில் நடித்ததற்காக நடிகை லக்ஷ்மி இராமகிருஷ்ணனுக்கு விருது வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி விருது வழங்குவதற்குவதற்காக அவருக்கும் அழைப்பு விடுவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நீண்ட நேரம் விருதிற்காக காத்திருந்தும் விருது வழங்கப்படாமையால் லக்ஷ்மி ராம கிருஷ்ணன். ஆவேசமடைந்து விருது வழங்கும் மேடைக்குச் சென்று எதற்காக தன்னை விருதிற்கு அழைத்து அசிங்கப்படுத்தியதாக சத்தம் போட்டுள்ளார்.
இதனால் விருது வழங்கும் குழுவினர் அவரை சமாதானப்படுத்தி மன்னிப்புக் கேட்டதோடு அவரின் விருதினையும் வழங்கி அனுப்பி வைத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!