• Sep 20 2024

வெண்பாவை அதிரடியாக கைது செய்த போலிஸார்- சௌந்தர்யாவிடம் லக்ஷ்மி கேட்ட முக்கிய கேள்வி-ஆடிப்போன வேணு

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாரதி கண்ணம்மா. அந்த வகையில் இன்றைய தினம் என்ன நடந்தது என்று பார்ப்போம். வெண்பா தன்னை கடத்தல் கேஷில் போலிஸ் கைது செய்து கொண்டு போவது போல கனவு காண்கின்றார்.

இதனால் திடுக்கிட்டு எழும்பி கதற வேலைக்காரி சாந்தி வந்து என்னம்மா என்னாச்சு என்று கேட்டு தண்ணீர் கொடுக்கிறார். பின்பு வெண்பா ஹேமாவை கொலை செய்திருக்கலாம் என்று கூறி கையில் இருந்த கிளாசை எறிந்து விடுகின்றார். இதனால் கையில் காயம் ஏற்பட்டு விட சர்மிளாவும் ரோஹித்தும் ஓடி வந்து வெண்பாவை ஹாஸ்பிட்டஸ் கொண்டு போகின்றனர்.


பின்னர் வேணுவும் சௌந்தர்யாவும் பேசிக் கொண்டிருக்கும் போது ஹேமாவை கடத்தியது யார் என்று அகிலன் கண்டு பிடித்து விட்டானா என்று வேணு கேட்கின்றார்.அதற்கு சௌந்தர்யா இப்போ தான் விசாரணை நடந்து கொண்டிருக்கின்றதைப் பற்றியும் பாரதி தன்கிட்ட போன் பண்ணி பேசியது குறித்தும் கூறுகின்றார்.

மேலும் பாரதி வரட்டும் அவனுக்கு புரிய வைப்போம் என பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்து வெண்பா ஹோஸ்பிட்டலில் இருக்கும் போது சாந்தி பதற்றமாக வந்து ஹேமாவும் இந்த ஹாஸ்பிட்டலில் தான் அட்மிட் ஆகியிருப்பதாக கூறுகின்றார்.மேலும் உங்க ராசிக்கு இந்த மாதம் முழுக்க கெட்டது நடக்கும் என்று தான் போட்டிருக்கு நீங்க மறுபடியும் ஜெயிலுக்கு போய்டுவீங்களோ என்று பயமாக இருக்கு என்று கூற வெண்பா சிரிக்கின்றார்.


அதன்பின்னர் லக்ஷ்மி சௌந்தர்யாவிடம் சென்று அப்பாவும் அம்மாவும் ஏன் பிரிஞ்சிருக்கிறா ங்க அப்பா ஏன் என்னையும் ஹேமாவையும் வெறுக்கிறார். பெரியவங்களோட சண்டையை ஏன் சின்னப்பிள்ளைகள் எங்க கிட்ட காட்டுறாங்க என்று அடுக்கடுக்காக கேள்வி கேட்கின்றார்.

ஆனால் லக்ஷ்மியிடம் உண்மையை சொல்லாமல் வேணு லக்ஷ்மிக்கு அட்வைஸ்ட் பண்ணுகின்றார்.இருந்தாலும் லக்ஷ்மி அம்மாவும் அப்பாவும் பிரிஞ்சதற்கு என்ன காரணம் என்று கேட்டு அழுகிறார். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிகின்றது.

Advertisement

Advertisement