விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் ஏழு வருடங்களுக்கும் மேலாக காதலித்து கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்த கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் சென்றதோடு பின்னர் கேரளாவில் உள்ள செட்டி குளங்கரா கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்தனர்.தன் பின்னர் புதுமணத் தம்பதிகள் தேனிலவுக்காக தாய்லாந்தில் உள்ள பேங்காக் நகருக்கு சுற்றுலா சென்றனர்
பின்பு நாடு திரும்பிய இருவரும் தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வந்தனர்.இந்த நிலையில் சில நாட்களுக்கு முதல் இருவரும் ஸ்பெயின் நாட்டுக்குச் சென்றுள்ளனர்.இது தொடர்பான விமான பயண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
எப்போதும் விக்கியுடன் போஸ் கொடுக்கும் நயன் இதில் சிங்கிளாக நின்று, துளியும் மேக்கப் போடாமல் இருக்கிறார். சற்றுமுன் சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்ட இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
Listen News!