• Sep 20 2024

ஒன் த ஸ்பொட்லையே என்னோட நடிப்பைப் பார்த்து சிரிச்சிடுவாரு- தளபதி விஜய் குறித்து மனம் திறந்த வடிவேலு

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர் என்று கூறியதும் அனைவரின் நினைவிலும் தோன்றும் நடிகர் வடிவேலு தான். இவர் தனது காமெடி கலந்த இயல்பான நடிப்பினால் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை கவர்ந்தவர். விஜய் அஜித் சூர்யா ரஜினி கமல் சரத்குமார் பிரபுதேவா எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

நடிகனாக மட்டுமல்லாது நடனக் கலைஞனாகவும் பாடகராகவும் பல திரைப்படங்களில் வந்திருக்கின்றார். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்

இதனை தொடர்ந்து, உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்தில் நகைச்சுவை வேடத்திலும் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் இவர் சில ஆண்டுகளுக்கு முன் கலந்து கொண்ட பேட்டி ஒன்று வைரலாகி வருகின்றது.

அதாவது தளபதி விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றி கேட்ட போது விஜய் ஒரு நல்ல நடிகர் காவலன் படத்தில் என்னோட சேர்ந்து அவரும் காமெடி பண்ணுவாரு. அதே போல நான் நடிச்சிட்டு இருக்கும் போதே என்னோட காமெடியைப் பார்த்து சிரிச்சிடுவாரு. என்னுடைய நல்ல ரசிகன் ப்ரண்ஸ் தொடங்கி காவலன் வரையிலும் அவருடன் நடித்த எல்லாப் படத்திலும் அப்படித்தான் உடனே சிரிச்சிடுவாரு என்று கூறியதைக் காணலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement