• Sep 20 2024

ஒரே படத்தில் இணையும் முன்னணி நான்கு நடிகைகள்-யாருடைய படத்தில் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் சல்மான் கான். இவர் பீவி ஹோ தோ ஐசி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகினார். இதன் பிறகு மைனே பியார் கியா என்ற படத்தின் மூலம் ஹிந்தி திரைப்படத்துறையில் அறிமுகமாகினார்.

இவர் நடிப்பில் கடந்த பல வருடங்களுக்கு முன் வெளிவந்த மசாலா கலந்த திரைப்படம் நோ என்ட்ரி.

மேலும் இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகாவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கப்போவதாக தகவல் கசிந்துள்ளது.

இவர் மட்டுமின்றி தமன்னா மற்றும் ராஷ்மிகா மந்தனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு, இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆட, நடிகை பூஜா ஹெக்டேவிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இதன்முலம் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நான்கு கதாநாயகிகளை ஒரே படத்தில் நடிக்கவைக்க திட்டமிட்டுள்ளார் சல்மான் கான்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement