விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய 7ஜி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஸ்ரீநிதி. இவர் இதனைத் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்னும் சீரியலில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்திருந்தார்.
இவர் சில நாட்களுக்கு முதல் வலிமை படத்தைப் பற்றி விமர்சனம் செய்ததால் ரசிகர்கள் இவரை கடுமையாக விமர்சித்து வந்தனர்.இதனால் மன அழுத்தத்திற்குள்ளான இவர் சில காலம் மீடியா பக்கம் தலை காட்டாமல் இருந்ததோடு தான் தற்பொழுது குணமடைந்து விட்டதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார்.
இருப்பினும் சில நாட்களுக்கு முதல் சிம்பு தன்னை காதலித்துவிட்டு ஏமாற்றுவதாக அவரது வீட்டிற்கு முன்பு தர்ணாவில் ஈடுபட்டதோடு சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட போஸ்ட்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் ஸ்ரீநிதி.
இது தவிர அவரது தோழி நக்ஷத்ரா குறித்து பேசி பரபரப்பை கிளப்பி வருகிறார் ஸ்ரீநிதி. ஸ்ரீநிதி கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் நான் இனி பேசவில்லை… என் கதை பேசும் என்பதை ஸ்பெல்லிங் மிஸ்டேக்குடன் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள், முதலில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாமல் எழுதக் கற்றுக்கொள்ளுங்கள்… பிறகு கதை பேசலாம் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் அவரது பதிவில் உள்ள தவறை சுட்டிக் காட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!