விஜய்யின் 67வது படமாக உருவாகி வருகிறது லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 என்ற டைட்டிலில் தொடங்கப்பட்ட லியோ ஷூட்டிங் தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்த படக்குழு அதனைத் தொடர்ந்து காஷ்மீரில் முகாமிட்டுள்ளது. நேற்றைய தினம் லியோ படப்பிடிப்பில் எடுத்த போட்டோவை லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டரில் ஷேர் செய்திருந்தார்.
லோகேஷ் ஷேர் செய்திருந்த போட்டோவின் நடுவில் தீ கொளுந்துவிட்டு எரிய, அதன் பின்னணியில் விஜய், லோகேஷ், ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் அன்பறிவ் ப்ரதர்ஸ் ஆகியோருடன் கெளதம் மேனன், மேத்யூ தாமஸ் ஆகியோரும் இருந்தனர்.இந்நிலையில் தற்போது லியோ படத்தில் திரைக்கதை மற்றும் வசனம் எழுதுவதில் பணியாற்றிய இயக்குநர் ரத்னகுமார் பேட்டியில் ஒரு அப்டேட் கொடுத்து இருக்கிறார்.
ரத்னகுமார் அளித்த பேட்டியில் "உங்க எதிர்பார்ப்பை பெருசா வச்சிக்கோங்க, லியோ படம் அதை விட பெரியதாக இருக்கும்."பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக வேண்டும், எல்லா மொழிகளுக்கும் டைட்டில் சரியாக இருக்க வேண்டும் என்பதால் தான் லியோ என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டது.
இன்னும் சில தினங்களில் நானும் காஷ்மீர் செல்ல இருக்கிறேன். இது தான் இப்போதைக்கு அப்டேட் என ரத்ன குமார் கூறி இருக்கிறார்.இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!