விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் பல நட்சத்திரங்கள் நடித்துவரும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் 50 நாட்களை கடந்து காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் மே மாதம் 5ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து காஷ்மீரில் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவிற்கிடையில் 50 நாட்கள் சூட்டிங்கை படக்குழுவினர் முடித்துவிட்டு சென்னை திரும்பினர். காஷ்மீரில் படக்குழுவினர் பட்ட இன்னல்களையும் வீடியோவாக வெளியிட்டனர். விஜய்யின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.
வரும் மே மாதம் 5ம் தேதி படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த சூட்டிங் ஒரு மாதம் நீடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன் ப்ரமோஷன்களில் பிஸியாக இருந்த த்ரிஷா, சென்னையில் இந்த சூட்டிங்கில் இணையவுள்ளார்.
இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான அளவில் பாடல் சூட்டிங் எடுக்கப்படவுள்ளதாகவும், அனிருத் இசையில் படத்தின் பாடல் மிகச்சிறப்பாக அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாடலுக்காக 10 நாட்கள் தொடர்ந்து ரிகர்சல் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதையடுத்து தொடர்ந்து 10 நாட்கள் பாடல் சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளும் பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச அளவில் கிராபிக்ஸ் வேலைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் ஜூலை மாதத்தில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்டபடி அக்டோபர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யும் வகையில், படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.
Listen News!