• Sep 20 2024

''உன்னெல்லாம் ரோட்ல அலைய விடனும் டா''- ஃபாரின் காரில் வந்து பதிலடி கொடுத்த சூப்பர்ஸ்டார்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இன்றளவும் சினிமாவில் டாப் ஹீரோவாக கலக்கிக் கொண்டிருப்பவர் ரஜினி.

நடிகர் ரஜினிகாந்த்தின் 16 வயதினிலே படம் ரிலீசாகும் முன்பு, ஏ.வி.எம் ஸ்டுடியோவில் ஒரு முன்னணி தயாரிப்பாளர் ஒருவர் தான் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் ரஜினிகாந்தையும் நடிக்க கமிட் செய்துள்ளார். அப்போது ரஜினி அவரிடம் தனக்கு 10 ஆயிரம் சம்பளம் வேண்டும் என கேட்டுள்ளார். இறுதியில் பேச்சுவார்த்தை நடத்தி ரூ.6 ஆயிரம் சம்பளமாக தருவதாக அந்த தயாரிப்பாளர் கூறி இருக்கிறார். இதற்கு ஓகே சொன்ன ரஜினி தனக்கு அதில் ஆயிரம் ரூபாயை மட்டும் அட்வான்ஸாக கொடுக்குமாறு கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த தயாரிப்பாளர் மறுநாள் தருவதாக கூறி ரஜினியை அனுப்பி வைத்துள்ளார். மறுநாள் தராததால் ரோட்டுக்கடையில் இருந்து போன் போட்டு பேசிய ரஜினியிடம் ஷூட்டிங்கிற்கும் வரும் போது தருவதாக தெரிவித்துள்ளார். ஷூட்டிங் ஆரம்பிக்கும் தினத்தன்று ரஜினி ஸ்டூடியோவுக்கு வந்ததும் அந்த ஆயிரம் ரூபாய் எப்போ தருவீங்க என கேட்டுள்ளார். அந்த அட்வான்ஸ் பணத்தை தந்தால் தான் மேக் அப் போடுவேன் என சொல்லிட்டாராம் ரஜினி.

உடனே அங்கு வந்த தயாரிப்பாளர், ரஜினியை பார்த்து, ‘ஏண்டா நாலு அஞ்சு படம் தான் பண்ணிருக்க, பணம் கொடுக்கலேனா மேக்கப் போட மாட்டியா. உன்னமாதிரி எத்தனை பேர நான் பாத்திருக்கேண்டா. உன்னெல்லாம் ரோட்ல அலைய விடனும் டா. கேரக்டரும் கிடையாது, ஒன்னும் கிடையாது போடானு’ சொல்லிட்டாராம். கார்ல கூட்டிட்டு வந்த மாதிரி கார்லயே போய் இறக்கி விடுங்கனு கேட்டாராம் ரஜினி. அதற்கு காரெல்லாம் கிடையாது, அதுக்கெல்லாம் வாடகை கொடுக்கனும், நீ நடந்தே போனு சொல்லி ரஜினியை அவமானப்படுத்தி அனுப்பிவிட்டாராம் அந்த தயாரிப்பாளர்.

அப்போ ரஜினியின் மனதில் ஓடியதெல்லாம் ஒன்றுதானாம், இதே கோடம்பாக்கம் ரோட்ல வெளிநாட்டு கார்ல வந்து ஏவிஎம் ஸ்டூடியோல வந்து அந்த தயாரிப்பாளர் முன்னாடி கால்மேல கால்போட்டு உட்காரலேனா நான் ரஜினிகாந்த் இல்லை என்று முடிவு செய்து அடுத்தடுத்து படங்களில் நடித்து அதன்மூலம் வந்த வருமானத்தை வைத்து 2 ஆண்டுகளில் இட்டாலியன் ஃபியட் (Italian Fiat) என்கிற வெளிநாட்டு காரை 4.5 லட்சத்துக்கு வாங்கி உள்ளார்.

அது வெளிநாட்டு கார் என்பதால் அதற்காக ஒரு வெளிநாட்டு டிரைவரையும் வேலைக்கு வைத்து மறுநாள் காலை 8 மணிக்கு விட்றா வண்டிய ஏவிஎம்-க்குனு சொன்னேன். என்னை அவமானப்படுத்திய தயாரிப்பாளரின் கார் எங்கு நின்றதோ, அங்கேயே எனது காரையும் நிற்க வைத்து, கீழ இறங்கி வண்டி மேல ஸ்டைலா சாஞ்சு நின்னுகிட்டே அந்த தயாரிப்பாளர் முன் 2 சிகரெட் அடிச்சேன். அப்போ அங்கு கூட்டமே கூடிருச்சு” என தான் வாங்கிய முதல் கார் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.


Advertisement

Advertisement