• Sep 20 2024

'அவனை வாழ விடுங்க..' சாண்டி மாஸ்டருக்காக காஜல் பசுபதி திடீரென வெளியிட்ட போஸ்ட்! அப்போ சம்பவம் இருக்கா?

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி ரசிகர்கள் மத்தியில்  தனக்கென ஒரு இடம் பிடித்தவர் தான் பிரபலமடைந்தவர் காஜல் பசுபதி. மேலும், இவர் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 

நடிகை காஜல்முதன் முதலில் நடிகையாக அறிமுகமானது வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் தான். மேலும் இந்த படத்தில் ஒரு செவிலியர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் காஜல். அதன் பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான டிஷ்யூம் படத்தில் சந்தியாவின் தோழியாக படம் முழுவதும் நடித்திருந்தார்.


அத்தோடு சிங்கம், கோ, மௌனகுரு, கௌரவம், இரும்பு குதிரை ,கலகலப்பு2 போன்ற பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் காஜல் பசுபதி. இதனைத் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த காஜல் நடன இயக்குநரான சாண்டியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள். விவாகரத்துக்கு பின்னர் சாண்டி வேறு திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் ஒரு ஆண்குழந்தையும் உள்ளது.


அதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக காஜல் பசுபதி தனது இன்ஸ்டா பக்கத்தில் தெரிவித்திருந்தார்.


இந்த நிலையில், சாண்டி மாஸ்டரை காஜலுடன் இணைத்து செய்திகள் பரவ, இதை பார்த்த காஜல் பசுபதி, 'அவனை வாழ விடுங்கள்' என தற்போது கோவமாக பதிவொன்றை இட்டுள்ளார்.

அதன்படி, தனக்கும் சாண்டி மாஸ்டருக்கு விவாகரத்து ஆகிவிட்டது, ஏன் அதன் பிறகும் அவருடைய புகைப்படங்களை இணைத்து என்னைப் பற்றிய செய்திகளை வெளியிடுகின்றீர்கள். அவனை வாழ விடுங்கள் என்று கூறி தனது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.



Advertisement

Advertisement