• Sep 20 2024

ஜவான் படம் வெளியாகட்டும் அதுக்கு பிறகு பார்க்கலாம்- நயன்தாராவைப் பற்றி பேசிய கரண் ஜோஹரை விளாசி வரும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சின்னத்திரையில் பிரபல்யமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தான் காபி வித் கரண் . இந்த நிகழ்ச்சியினை கரண் ஜோஹர்தொகுத்து வழங்கி வருகின்றார்.இந்த நிகழ்ச்சியில் சமீபத்தில் சமந்தா மற்றும் அக்‌ஷய் குமார் இருவரும் கரண் ஜோஹர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

செட்டுக்குள் வரும் போதே சமந்தாவை அலேக்காக தூக்கிக் கொண்டு அக்‌ஷய் குமார் வந்ததே ட்ரோல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி அக்‌ஷய் குமார் நிகழ்ச்சியிலும் சமந்தாவை கண்டபடி தூக்கி சுற்றியது நாக சைதன்யா ரசிகர்களை ரொம்பவே கடுப்பில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இந்தநிகழ்ச்சியில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நயன்தாராவுடன் நடித்த அனுபவத்தை சமந்தா ஷேர் செய்திருந்தார். நயன்தாராவின் ஸ்டார்டம் மற்றும் அவரது எளிமை குறித்து பாராட்டி பேசியிருந்தார்.

அப்போது உடனடியாக குறுக்கிட்டு கரண் ஜோஹர் பேசியது தான் தற்போது ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தி உள்ளது. அதாவது ஆர்மேக்ஸ் நடிகைகள் பட்டியலில் நடிகை சமந்தா முதலிடத்தை பிடித்துள்ளார் அந்த பட்டியலில் நடிகை நயன்தாரா 3வது இடத்தை பிடித்துள்ளார் என்பதை வைத்து சர்ச்சையான கருத்தை கரண் ஜோஹர் பேசியதாக அவருக்கு எதிராக நயன்தாரா ரசிகர்கள் விட்டு விளாசி வருகின்றனர்.

மேலும் தனது நிகழ்ச்சிக்கு நயன்தாராவைத் தான் முதலில் கரண் ஜோஹர் அழைத்தார் என்றும் அவர் மறுத்துவிட்ட காண்டு தான் இப்படி பேசியிருக்கிறார் என்றும் விளாசி வருகின்றனர். மேலும், அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் ஜவான் படம் வெளியாகட்டும், பாலிவூட் மட்டுமல்ல டோட்டல் இந்தியாவிலேயே நம்பர் ஒன் நாயகியாக நயன்தாரா மாறுவார் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement