• Sep 20 2024

உனக்கு திராணி இருந்துச்சுன்னா சொல்லு பார்ப்போம்- திடீரென ஆவேசமாக பேசிய அசீம- கொந்தளிக்கும் விக்ரமன் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழில் சிறந்த ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக இருக்கும் நிகழ்ச்சி பிக் பாஸ்.இதன் ஆறாவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முடிவுக்கு வந்திருந்தது.மொத்தம் 106 நாட்கள் நடந்த இந்த நிகழ்ச்சியின் ஃபினாலேவில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார். ஆனால் அவர் டைட்டில் வின்னர் ஆனதை அடுத்து பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.

அப்படி இருக்கையில், பிரபல சேனலில் "மக்களுடன் அசீம்" என்ற பிரத்யேக நிகழ்ச்சியில் அசீம் கலந்து கொண்டார். அதில் பல்வேறு சுவாரஸ்ய விஷயங்களையும் தன் மீதான விமர்சனங்களுக்கான விளக்கத்தையும் பகிர்ந்து கொண்டார்.அப்போது பிக் பாஸ் டைட்டில் வின்னராக கோப்பையுடன் அசீம் இருக்கும் புகைப்படம் தொடர்பான மீம் ஒன்று காண்பிக்கப்பட்டது. 


அந்த தருணம் குறித்தும் பின்னர் கேள்வி எழுப்பப்பட்ட சூழலில், இதற்கு பதிலளித்த அசீம், "இந்த கப்ப நான் வாங்குவேன்னு எனக்கு தெரியும். நான் இருக்கும் போது என் நண்பன் மணிகண்டன், உடன் பிறவா சகோதரி தனலட்சுமி, ஆயிஷா, என் தம்பி அசல் கோலார் இவங்க எல்லாரையும் பார்க்கும் போது ஒரு Enthu -வோட இருந்தாங்க.

அதே கூட்டத்தில் கைய பின்னாடி கட்டிட்டு இருந்தவங்களையும் நான் பார்த்தேன். ஏன்னா நம்ம உள்ள இருக்கும் போது பயந்து பேசுற ஆளில்ல. வெளியே இருக்கும் போது கேட்கவா வேணும்.உள்ள எப்பவுமே அசீம் கோவப்படுறான், கோவப்படுறான்னு. உனக்கு திராணி இருந்துச்சுன்னா நான் வேற என்ன பண்ணேன்னு நீ சொல்லு பார்ப்போம். ஏன்னா ஒண்ணுமே இல்ல சொல்றதுக்கு. உனக்கு என்கிட்ட Fault இருந்துதுன்னா கோபத்தை மட்டும் தான் சொல்ல முடியும்.


உன்ன மாதிரி பின்னாடி போய் புறம் பேசுறதில்ல. எல்லாருமே கேம் முடிஞ்சதுக்கு அப்புறம் நைட் Couchல உட்கார்ந்து பேசிட்டு இருப்பாங்க. நான் போய் படுத்துடுவேன் ஏன் தெரியுமா, எனக்கு தெரியும் வெளியே இத்தனை பேர் எனக்காக இருக்காங்க அப்படின்னு.அதனால் அந்த கப் அடிப்பேங்குற டவுட்டு சத்தியமா, இறைவன் மேல ஆணையா எனக்கு ஒரு சதவீதம் கூட இருந்ததே இல்லை. எனக்கு தெரியும் நான் கப் அடிப்பேன்னு. ஏன்னா வீட்டுக்குள்ள நான் நானா தான் இருந்தேன். நான் முகமூடி போட்டு எல்லாம் உள்ள போகல. ஆனா, உள்ள இருக்கிற பல முகமூடிய கிழிச்சிருக்கேன். ஒரு சிலர் சொன்னாங்க மக்கள் புத்திசாலி ஆனவங்கன்னு. டேய், மக்கள் புத்திசாலியானதுனால தான்டா என்னை ஜெயிக்க வெச்சாங்க" என தெரிவித்தார்.


Advertisement

Advertisement