இளம் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் இன்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் விக்ரம். இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் பதக் பாசில் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.
இப்படத்தில் நடிகர் சூர்யா முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இன்று காலை இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்ட இயக்குநர் லோகேஷ் கனகராஜ், தனது நீண்ட நாட்கள் கனவு நிறைவேற உள்ளதாக தெரிவித்துள்ளதுடன், விக்ரம் பார்க்கும் முன்னர் கைதியை மீண்டும் ஒருமுறை பார்த்து விடுமாறு கூறியுள்ளார்.
இது சம்மந்தமாக லோகேஷ் பகிர்ந்திருந்த டுவிட்டைப் பகிர்ந்துள்ள கைதி தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு “கைதி 2 ஆரம்பிக்கிலாங்களா”என டுவிட் செய்துள்ளார். இதனால் கைதி 2 விரைவில் ஆரம்பிக்கப்படும் என ரசிகர்கள் காத்திருப்பதும் முக்கியமாகும்.
Listen News!