பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. அமரர் கல்கி எழுதிய நாவலை தழுவி எடுக்கப்பட்ட இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது.இப்படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினி தேவியாக ஐஸ்வர்யா ராய் பச்சனும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடித்துள்ளனர். முன்னதாக வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 1 -ற்கு மக்களிடம் ஏகோபித்த வரவேற்பு கிடைத்த நிலையில், அடுத்த பாகத்தின் மீதும் மக்களுக்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (29 -03 -2023) பொன்னியின் செல்வன் பாகம் 2 படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல்ஹாசன் மற்றும் சிலம்பரசன் பங்கேற்ற நிலையில் படம் சார்ந்த நட்சத்திரங்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
அந்த வகையில் நடிகை த்ரிஷாவும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசும் போது, “ பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு எனக்கு குந்தவை போல ஆடையணிந்து 100 போஸ்டாவது வரும். அதில் சிலவற்றை நான் ரீ போஸ்ட் செய்தேன்.
அங்கே நிறைய பேருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். எல்லாவற்றிற்கும் இங்கு நான் நன்றி செல்ல விரும்புகிறேன். பொன்னியின் செல்வன் படத்தை இவ்வளவு பெரிய வெற்றியை பெற செய்ததிற்கும், குந்தவையை வைரல் ஆக்கியதற்கும். நன்றி..எப்போதுமே உயிர் உங்களுடையதுதான் ” என்று பேசினார்.
• We expected you to say it as if you were asking only #Vandiyadevan @Karthi_Offl ❤ 😎#Kuntavai Devi 👸 @trishtrashers , you have said it as if the village is listening😉
Uyir Ungaludaiyadhu Devi 😍❤🥰#Karthi #Trisha 😘#PonniyinSelvan2 #PS2 #PS1 💥 #Karthi25 🔥 pic.twitter.com/nsftOppTMI
Listen News!