• Sep 20 2024

வாழ்க்கை மிகவும் அழகானது- தந்தையர் தினத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட ஸ்பெஷல் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த ஆண்டு நடிகை விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் திருமணம் செய்து கொண்டனர். 9 வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதால் ரசிகர்கள், பிரபலங்கள் எனப் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். திருமணமான நன்கே மாதத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளையும் பெற்றுக் கொண்டனர்.

இன்றைய தினம் தந்தையர் தினத்தை முன்னிட்டு நடிகைகள் தங்கள் தந்தையுடன் இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கடந்த ஆண்டு அப்பாவான இயக்குநர் விக்னேஷ் சிவனும் தந்தையர் தினம் கொண்டாடி உள்ளார்.


தனது குழந்தைகளை தூக்கி வைத்துக் கொண்டு தனது முகத்தைக் கூட காட்டாமல் அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டாகி வருகிறது.நடிகை நயன்தாராவை எங்கே காணவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


அஜித்தின் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடைசியில் அஜித் அவர் வேண்டாம் என நீக்கி விட்டார். இதனால் விக்னேஷ் சிவன் அடுத்ததாக லவ் டுடே நாயகன் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து படம் பண்ணப் போகிறார் என சொல்லப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement