விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்ரி ஷோ தான் குக்வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 3 சீசன்களைக் கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமானவர் தான் சுனிதா.
இந்த நிகழ்ச்சியில் தத்தி தத்தி ஆங்கிலம் பேசி ஏராளமான ரசிகர் பட்டாளத்தை சேர்த்த இவர் இதற்கு முதல் ஆரம்பத்தில் நிறைய நடன நிகழ்ச்சிகளில் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.ஆனால் அவற்றிலிருந்து சிறந்த அங்கீகாரம் கிடைக்கவில்லை எனலாம்.
மேலும் இவர் அண்மையில் முடிவடைந்த குக்வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்குபற்றியநடிகர் சந்தோஷ் பிரதாப்புடன் ரொமான்ஸ் செய்து கிண்டலடிக்கப்பட்டார். இதனால் இருவரும் கிசுகிசுக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய சந்தோஷ் பிரதாப் சுனிதா குறித்து, அவர் ஒரு நல்ல தோழி என்றும் அவரை திருமணம் செய்தால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளார்.இதனால் வருங்காலத்தில் இவர்கள் இருவரும் காதலர்களாக மாறுவார்களா? என்ற சந்தேகம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது எனலாம்.
Listen News!