தமிழ் சினிமாவில் மன்மதன் என்னும் திரைப்படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமாகி தற்பொழுது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் தான் சந்தானம்.இவர் தற்பொழுது 'டிடி ரிட்டன்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
ஜுலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தை பிரேம் ஆனந்த் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் சந்தானத்துடன் ரெடின் கிங்ஸ்லி, மாறன், பிரதீப் ராவத், மாசூம் சங்கர், ஃபெசி விஜயன், மொட்ட ராஜேந்திரன், முனிஸ்காந்த், சுரபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எனவே இப்படத்தின் ப்ரமோஷனுக்காக சந்தானம் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அதில், நான் சினிமாவுக்கு வந்ததுக்கு காரணம் சிம்பு தான். அவர் தான் டிவியில் இருந்து என்னை 'மன்மதன்' படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின்னர் எஸ்.ஜே. சூர்யாவிடம் பேசி 'அன்பே ஆருயிரே' படத்தில் நடிக்கும் வாய்ப்பையும் பெற்று கொடுத்தார். அதன்பின்னர் தொடர்ச்சியாக சிம்புவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளேன். ஹீரோ ஆன பிறகு கூட ஒரு பக்கம் எங்ககூடயும் படம் பண்ணலாம்ன்னு சொன்னார்.
அதன்பின்னர் சிம்புவோட தற்போதை மாற்றம் குறித்து பேசிய சந்தானம், முன்னாடி எல்லாம் நாங்க சந்திக்கும் போது நிறைய ஜாலியான விஷயங்கள் பற்றி பேசுவோம். ஆனால் இப்போது எல்லாம் சந்தித்து பேசும் போது ஆன்மீகம் பற்றி தான் பேசுகிறோம். சிம்புவுக்கு ஆரம்பத்தில் இருந்தே கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் சித்தார்கள், சாமியார்களை சந்திப்பது, திருவண்ணாமலை போவது என்ற அளவுக்கு மாறுவார் என நினைத்து கூட பார்க்கவில்லை என தெரிவித்துள்ளார். சிம்பு குறித்து சந்தானம் பகிர்ந்துள்ள இந்த விஷயம் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
Listen News!