• Sep 20 2024

சூர்யாவைத் தொடர்ந்து மாஸ் காட்டும் தங்கை பிருந்தா.... எதனால் தெரியுமா..? குவியும் பாராட்டுக்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறிப்பாக 70, 80 காலப்பகுதிகளில் பிரபல ஹீரோவாக வலம் வந்தவர் நடிகர் சிவக்குமார். அந்தக்காலத்தில் நடிப்பில் வெற்றிக்கொடி கட்டி வந்த இவரின் வாரிசுகளான சூர்யா, கார்த்தி ஆகிய இருவருமே தந்தையை போன்று இன்று முன்னணி நடிகர்களாக உள்ளனர். 


இந்நிலையில் தற்போது இளையமகன் கார்த்தி மணிரத்னத்தின் கனவுப் படமான 'பொன்னியின் செல்வன்' படத்தில் வந்தியதேவனாக நடித்துள்ளார். இதில் இவரின் நடிப்பை  திரையில் கான்பதற்காக ரசிகர்கள் பலரும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். 

அதேபோன்று உலகநாயகன் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தில் தோன்றியிருந்த மூத்த மகன் சூர்யா அப்படத்தில் ரோலக்ஸாக வந்து கலக்கி இருந்தார். அதுமட்டுமல்லாது பாலாவுடன் 'வணங்கான்', வெற்றிமாறனுடன் 'வாடிவாசல்', சிறுத்தை சிவா உடன் 42 வது படம் எனப் பிஸியாக இருந்து வருகின்றார். 


அண்ணன், தம்பி இருவரினதும் நடிப்பில் உருவாகி வருகின்ற படங்கள் பலவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவர்களை பிரபலப்படுத்தியிருக்கிறது. அத்தோடு சமீபத்தில் தான் சூர்யா தேசிய விருதையும் வென்றெடுத்து பெருமை சேர்த்திருந்தார். அதாவது இவர் தயாரித்த 'சூரரைப்போற்று' என்ற படத்திற்காக தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 

இவர்களைப் போன்றே சூர்யாவின் மனைவி ஜோதிகாவும் பிரபல நடிகையாக உள்ளார். அதுமட்டுமல்லாது தனது கணவர் சூர்யாவுடன் இணைந்து 2டி நிறுவனத்தை நடாத்தியும் வருகிறார். இந்நிறுவனத்தின் மூலமாக பிரபல படங்கள் பலவற்றையும் தயாரித்து பாராட்டுகளை குவித்து வருகின்றனர் இந்தத் தம்பதியினர். 


இந்நிலையில் சிவக்குமாரின் மகளும், சூர்யா கார்த்தியின் சகோதரியுமான  பிருந்தாவும் தற்போது சினிமாத்துறையில் மும்மரமாக இறங்கி கால் பதித்து உள்ளார். எனினும் பிருந்தா சினிமாவுக்கு புதிதானவர் அல்ல. ஏனெனில் முன்னதாகவே பிரபல பாடகியாக வலம் வருபவர் தான் இவர். 

தன்னுடைய இனிமையான குரலால் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் நெஞ்சங்களை வசீகரிக்கும் இவர் 'ஜாக்பாட், பொன்மகள் வந்தால், ஓ2' என பல படங்களில் பாடியிருக்கின்றார். அதுமட்டுமல்லாது தற்போது டப்பிங் ஆர்டிஸ்டாகவும் சினிமாவில் களம் இறங்கியுள்ளார்.

அதாவது சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாஸ் காட்டி வரும் 'பிரம்மாஸ்திர' படத்தின் நாயகியான ஆலியா பட்டிற்கு தமிழில் பிருந்தா தான் பின்னணி குரல் கொடுத்துள்ளார். 


மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி பான் இந்தியா படமாக கடந்த ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்தில் அமிதாப்பச்சன், ஷாருக்கான், ரன்விர் கபூர், ஆலியா பட், மௌனி ராய் மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய இந்தப்படமானது தற்பொழுது திரையரங்குகளில் நேர்மையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் ஆலியா பட்டிற்கு பின்னணிக் குரல் கொடுத்த பிருந்தா பான் இந்தியப் படத்தில் இணைந்தமையினால் மிகவும் உற்சாகத்தில் இருந்து வருகின்றாராம்.

இது குறித்து பிருந்தா வெளியிட்டுள்ள பதிவில் ஆலியாவிற்கு குரல் கொடுத்ததன் மூலம் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக உருவெடுத்துள்ளதை மகிழ்ச்சி பொங்க ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கின்றார்.


Advertisement

Advertisement