தமிழ் சினிமாவில் தற்பொழுது வெற்றி இயக்குநராக வலம் வருபவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் வெளியான மாநகரம் கைதி மாஸ்டர் விக்ரம் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றிருக்கின்றன.அதிலும் விக்ரம் திரைப்படம் பிளாக் பாஸ்டர் வெற்றி பெற்றது.
மேலும் இவர் கைதி திரைப்படத்தை எழுதும் போது மன்சூர் அலி கானை நினைத்துதான் அந்தக் கதையை எழுதியதாக பல முறை பேட்டிகளில் தெரிவித்திருந்தார். பின்னர் கார்த்தி நடிப்பதாக முடிவானவுடன் அந்த கதையில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, பட்ஜெட் உயர்ந்து, படம் வேற லெவல் ஹிட்டடித்தது.
அத்தோடு இப்படத்தில் மன்சூர் அலிகான் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என ரசிகர்கள் கேட்டும் வருகின்றனர்.லோகேஷ் மன்சூர் அலி கானுக்கு ரசிகராக மாறியதற்கு காரணம் அவருடைய நடவடிக்கைகள்தான். பொதுவாக ஒரு பேட்டி கொடுத்தால் கூட சபை நாகரீகம் கருதி கேமராவிற்கு முன்பு நடிப்பார்கள். ஆனால் மன்சூர் அலி கான் எதார்த்தமாக இருப்பார். அவர் செய்யும் விஷயங்களை யாருமே செய்ய முடியாது. அதனால் எனக்கு அவரை பிடிக்கும் என்று லோகேஷ் கூறியிருக்கிறார்.
சமீபத்தில் கூட விக்ரம் திரைப்படத்தின் புரமோஷனில் மன்சூர் அலி கானை வைத்து எப்போதும் படம் பண்ணுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு, ஒவ்வொரு படத்திலும் அவருக்காக ஒரு கதாபாத்திரம் எழுதுவேன் ஆனால் அது அமையாமலே போய்விடும் கூடிய விரைவில் அவருடன் பணியாற்றுவேன் என்று லோகேஷ் கூறியிருக்கிறார்.
இதே போல லோகேஷ் உங்களை பற்றி கூறுவது உங்களுக்கு தெரியுமா என்று மன்சூர் அலி கானிடம் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் கேட்டபோது, எனக்கு நன்றாகவே தெரியும். கைதி திரைப்படம் எனக்காக எழுதப்பட்டபோது எப்படி இருந்தது என்று பல நபர்கள் என்னிடம் கூறியிருக்கிறார்கள். ஆனால் நானும் லோகேஷும் இதுவரை நேரில் சந்தித்தது கிடையாது. காதல் கோட்டை அஜித் தேவயானி போல் இருக்கிறோம். எனக்கும் மண்டையை போடுவதற்குள் பெரிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று இருக்கிறது. லோகேஷ் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்று தன்னுடைய வழக்கமான நகைச்சுவை பாணியில் பதில் அளித்துள்ளார் மன்சூர் அலி கான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!