• Sep 20 2024

எனக்கு எங்க அப்பா எப்போதும் சாபம் மட்டும் தான் விடுவார்- அதிர்ச்சித் தகவலைக் கூறிய லோகேஷ் கனகராஜ்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ,மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் மொழிகளில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் விக்ரம். இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்ததோடு இப்படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருந்தார். விஜய்சேதுபதி பகத் பாசில் சூர்யா ஆகியோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.

இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பலரும் கமல்ஹாசனைப் பாராட்டி வருகின்றனர். அத்தோடு விக்ரம் திரைப்பட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷிற்கு இந்திய அளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மேடையில் வைத்தே லோகேஷ் இயக்கத்தில் படம் நடிக்க ஆசை என்று கூறினார்.

சிறு வயதிலிருந்தே லோகேஷ் என்கிற பெயரை மட்டும்தான் பயன்படுத்தி வந்ததாகவும், சினிமாவில்தான் லோகேஷ் கனகராஜ் என்று வைத்துக் கொண்டதாகவும் அதற்குப் பின்னால் காரணம் இருக்கிறதென்றும் சொல்லியிருக்கிறார். அதாவது தான் எப்போதுமே சரியாக படிக்காமல் சினிமா சினிமா என்று அதன் மீதே மோகமாக இருந்ததாகவும், அப்போதெல்லாம் நீ சினிமாவிலேயே மூழ்கி சாகப் போகிறாய் என்று தன் அப்பா தனக்கு சாபம் விடுவாரென்றும், அதற்காகத்தான் சினிமாவில் அவரது பெயரையும் சேர்த்து போடுவதாக கூறியுள்ளார்.

மேலும் "உன்ன அவன் ஸ்வீட்டா பழி வாங்குறாம்பா" என்று தன் தம்பி தனது அப்பாவிடம் சொல்லியிருப்பதாகவும் கூறியுள்ளார்.
விக்ரமை தொடர்ந்து விஜய் படம், விக்ரம் மூன்றாம் பாகம், கைதி இரண்டாம் பாகம், இரும்புக்கை மாயாவி என்று பல படங்களை கையில் வைத்திருக்கிறார் லோகேஷ். இரும்புக்கை மாயாவி ஒரு சூப்பர் ஹீரோ படம் என்றும் அதில் சூர்யா நடிக்கவிருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் அது லோகேஷின் கனவுப் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

  1. காளி போஸ்டருக்கு எதிராக கனடாவில் தொடங்கிய கண்டனம்- தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் இயக்குநர் லீனா
  2. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் கார்த்தி நடிக்கும் வந்தியத்தேவன் போஸ்டர் ரிலீஸ்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement