• Sep 20 2024

கைதி 2 பற்றி பேசிய லோகேஷ்-பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தற்போது டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகின்றார் லோகேஷ் கனகராஜ்.2017 ஆம் ஆண்டு மாநகரம் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ் தன் முதல் படத்திலேயே ரசிகர்கள் முதல் சினிமா வட்டாரங்களை சார்ந்தவர்கள் வரை அனைவரையும் திரும்பிப்பார்க்க செய்தது என்று தான் கூற வேண்டும்.

வெளியான மாநகரம் திரைப்படம் அந்தாண்டு அதிக வசூலை ஈட்டிய படங்களில் ஒன்றாக அமைந்தது. அந்த வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கார்த்தியின் கைதி படத்தை இயக்கி இருந்தர்.

இப்படம் லோகேஷை மேலும் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. வித்யாசமான கோணத்தில் வெளியான கைதி திரைப்படம் ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று ஹிட்டடித்தது.. இதைத்தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து லோகேஷ் இயக்கிய மாஸ்டர் படமும் வசூல் வேட்டை நடத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவான விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றுவருகிறது. மேலும் லோகேஷ் இயக்கத்தில் கமல் நடித்து தயாரித்துள்ள விக்ரம் திரைப்படம் 250 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடினார். மேலும் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ் கைதி படத்தை பற்றியும் பேசினார். கைதி படத்தில் டில்லி பெரிய கபடி பிளேயர் எனவும், ஜெயிலில் கபடி போட்டிகளில் பங்கேற்று கோப்பைகளை வென்றவர் எனவும் தெரிவித்தார் லோகேஷ்.

அத்தோடு கார்த்தி கைதி படத்தில் வைத்திருக்கும் மஞ்சப்பை முழுவதும் கபடி போட்டிகளில் பங்கேற்று வென்ற கோப்பைகள் இருக்கும் என்றார் லோகேஷ். இந்நிலையில் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் டில்லி மிகப்பெரிய கபடி பிளேயர் என்பதை காண்பிப்பேன் எனவும் கூறினார் லோகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement