விஜய்டிவியில் ஹிட்டாக ஓடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம் என்னும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் நடிகை சுஜிதா. இவர் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.
இதனைத் தொடர்ந்து தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம் என உட்பட்ட பல்வேறு மொழி படங்களில் நடித்துள்ளார் . சில காலம் திரைப்பட வாய்ப்பில்லாமல் இருந்த இவர் தற்பொழுது சீரியலிலே நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
இந்த நிலையில் நடிகை சுஜிதா வாலி திரைப்படத்தில் நடந்த ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது எஸ். ஜே. சூர்யா இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான வாலி திரைபடத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்து கொண்டிருந்தேன்.
படப்பிடிப்பு எல்லாம் நடந்து முடிந்து ரெடியான பிறகு படத்தின் பிரிவியூ ஷோ பார்க்க எஸ் ஜே சூர்யா படத்தில் நடித்த அனைவரையும் கூப்பிட்டு இருந்தார். அதில் ஒருவராக நானும் அப்பொழுது போயிருந்தேன்.
படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த உடன் அஜித் சார் என்கிட்ட வந்து நீ பத்தாவது படிக்கிறாய் படிக்கின்ற வேலைய பாரு என என்னுக்கிட்ட சொன்னாரு இப்ப அவருக்கு அந்த ஞாபகம் இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியல ஆனா நான் அதை மறக்கல. அஜித் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் வந்து எதார்த்தமாக பேசுவார் என கூறினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!