தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’ படத்தில் இவர் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
இவருடைய இயற்பெயர் ரவி. ஆனால், இவர் முதன் முதலாக ‘ஜெயம்’ படத்தில் நடித்ததால் ஜெயம் ரவி என்று மாற்றிக்கொண்டார்.காதல் கதைகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெயம் ரவி, நகைச்சுவை கலந்த காதல் கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றார். எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி, போகன், சந்தோஷ் சுப்பிரமணியன், தனி ஒருவன், திக் திக் திக் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2009ம் ஜெயம் ரவி, ஆர்த்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர்.இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய இறைவன் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனை அடுத்து தனி ஒருவன் 2 திரைப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.
இப்படத்தின் முதல் பாகம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதை அடுத்தே இரண்டாம் பாகம் உருவாகி வருகின்றது. இதனை அவருடைய அண்ணனான மோகன் ராஜா தான் இயக்கி வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் ஜெயம் ரவி தற்பொழுது ஐஸ்கிறீம் குடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இப்புகைப்படம் வைரலாகி வருவதைக் காணலாம்.
Listen News!