தென்னிந்திய தொலைக்காட்சியான சன்டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் கயல்.இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
மேலும் அப்பாவை இழந்த குடும்பத்தில் ஒரு பெண் தனியாக எப்படி குடும்பத்தை சமாளிக்கின்றாள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது. இது ஒரு புறம் இருக்க நீண்ட நாள் நண்பனான எழில் கயலை பல வருடங்களாக காதலித்து வருகின்றார்.
இது கயலுக்கு தெரிந்தும் முதலில் மறுப்புத் தெரிவித்து வந்த கயல் தற்பொழுது எழில் மீது காதல் கொண்டுள்ளார்.இவ்வாறுஇருக்கையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.
அதில் கயலின் தம்பி அன்பு அடிபட்டு இருக்க அவரை காப்பாற்றுகின்றனர்.அதாவது கயலின் இரண்டாவது அக்காவின் கணவரின் தங்கை மற்றும் சமையல்காரர்கள் இணைந்து பாக்கபாற்றுகின்றனர்.இதனை அடுத்து அவர் பிழைப்பாரா என்ன நடக்கப்போகின்றது என்பது தெரியவில்லை.இவ்வாறு இருக்க மறுபுறம் கயலுக்கு பிறந்தநாள் பார்டி அரேஞ் பண்ணுகின்றார் எழில் மற்றும் குடும்பத்தினர்.
இவ்வாறுஇருக்கையில் கயலின் கடைசி தங்கை பார்டியில் இருந்து கொண்டு செல்பி எடுக்கலாம் எனக் கூற எல்லோரும் வருகின்றனர்.அந்த நேரம் கயலையும் எழிலையும் பார்த்து நான் என் அக்கா மாமாவை தான்செல்பி எடுக்க கூப்பிட்டேன் எனக் கூறுகின்றார்.இதனால் ஷாக்கடைகின்றார் கயல்.இத்துடன் ஆந்த ப்ரமோ நிறைவடைகின்றது.
Listen News!